By Sevvilam Parithi ‘பிரிட்டன் எப்படி பிரிட்டிஷ்காரனுக்குச் சொந்தமோ- பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரனுக்கு சொந்தமோ – அதுபோல – பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது!’ என்று எழுதினார் மகாத்மா காந்தி. அமெரிக்கா பிரிட்டனின் உதவியுடன் பாலஸ்தீனத்தின் மீது தங்களைத் திணிக்க முயற்சிக்கும் யூதர்களின் முயற்சி தவறானது என்றார் நேரு. சுதந்திர இந்தியாவின் பிரதமர் நேரு தலைமையிலான முதல் அரசாங்கம் பாலஸ்தீனத்தைப் பிரிப்பதற்கான ஐநா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது. வல்லாதிக்கக் கூட்டுறவால் – மே 14, 1948 இல் இஸ்ரேல் உருவானபோதுகூட – இந்தியா அதை ஒப்பவில்லை. துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகள் அங்கீகரித்தபிறகு – அரபு நாடுகள் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபிறகு – 1950இல்தான் நேரு தலைமையிலான இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது. ஆனபோதும், அதனுடனான முழு அரச உறவை இந்தியா ஏற்படுத்திக்கொண்டுவிடவில்லை என்பதை அடிக்கோடிட்டுக்கொள்ளுங்கள். உலகமே…
![]()