நீதி வென்றது!மூத்த வழக்கறிஞர்தோழர் திருமலைராஜன் குழுவினருக்கு நன்றி!!தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பாராட்டு!!!———————————————————————நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம். கந்துவட்டிக் கொடுமை கொடிகட்டிப் பறக்கிற முதல் வரிசை ஊர். கடன் வாங்கிய தாயும், மகளுமான அப்பாவி ஏழைப் பெண்களைப் பாலியல் கொடுமை செய்து, ஆபாசப் படமெடுத்து, இணையத்தில் பதிவேற்றுகிறது கந்துவட்டிக் கும்பல். இந்த அநீதியைத் தட்டிக் கேட்கிறான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழன் வேலுச்சாமி. போலீசில் புகார் தருகிறான். ஆத்திரம் கொண்ட கந்துவட்டிக் கும்பல், திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது. தோழர் வேலுசாமியின் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுபுறம், மூத்த வழக்கறிஞர் தோழர் திருமலைராஜன் அவர்களை, நீதிமன்றத்தின் துணையோடு, அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஏற்பாடு செய்தார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. பணபலம், அதிகார பலம், கொலைமிரட்டல் என்று சகல அஸ்திரங்களையும் தவிடுபொடியாக்கி, தோழர் திருமலைராஜன் அவர்கள்…
![]()