பிஜு (பிஜயனந்தா) பட்நாயக் (1916 – 1997) ஒருவர் மட்டுமே இந்தியாவில் மூன்று நாடுகளின் தேசியக் கொடிகளால் உடல் போர்த்தப் பட்டவர். இந்தியா, ரஷ்யா மற்றும் இந்தோனேசியா. பிஜு 2 முறை ஒடிசாவின் முதல்வராகவும் இருந்திருக்கின்றார். பிஜு பட்நாயக் ஒரு விமானி. இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் சிக்கலில் இருந்தபோது, டகோட்டா என்ற போர் விமானத்தில் பறந்து ஹிட்லரின் படைகளைக் குண்டுவீசித் தாக்கினார்,இது ஹிட்லரை பின்வாங்கச் செய்தது. சோவியத் யூனியனால் அவருக்கு அவருக்கு மிக உயர்ந்த விருது மற்றும் குடியுரிமை வழங்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதிபாகிஸ்தானியர்கள் காஷ்மீரைத் தாக்கியபோது, டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு ஒரு நாளைக்கு பல முறை விமானத்தில் பறந்து வீரர்களை ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்றவர் பிஜு பட்நாயக். இந்தோனேசியா ஒரு காலத்தில் டச்சுக்காரர்களின் காலனியாக இருந்தது, அதாவது ஹாலந்து.…
 
 
  
			 
			 
			 
			 
			 
			 
			