நீதி வென்றது!

நீதி வென்றது!மூத்த வழக்கறிஞர்தோழர் திருமலைராஜன் குழுவினருக்கு நன்றி!!தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பாராட்டு!!!———————————————————————நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம். கந்துவட்டிக் கொடுமை கொடிகட்டிப் பறக்கிற முதல் வரிசை ஊர். கடன் வாங்கிய தாயும், மகளுமான அப்பாவி ஏழைப் பெண்களைப் பாலியல் கொடுமை செய்து, ஆபாசப் படமெடுத்து, இணையத்தில் பதிவேற்றுகிறது கந்துவட்டிக் கும்பல். இந்த அநீதியைத் தட்டிக் கேட்கிறான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழன் வேலுச்சாமி. போலீசில் புகார் தருகிறான். ஆத்திரம் கொண்ட கந்துவட்டிக் கும்பல், திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது. தோழர் வேலுசாமியின் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுபுறம், மூத்த வழக்கறிஞர் தோழர் திருமலைராஜன் அவர்களை, நீதிமன்றத்தின் துணையோடு, அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஏற்பாடு செய்தார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. பணபலம், அதிகார பலம், கொலைமிரட்டல் என்று சகல அஸ்திரங்களையும் தவிடுபொடியாக்கி, தோழர் திருமலைராஜன் அவர்கள்…

Loading

Read More

மூன்று தேசங்களால் கவுரவிக்கப் பெற்ற ஓர் இந்தியன்

பிஜு (பிஜயனந்தா) பட்நாயக் (1916 – 1997) ஒருவர் மட்டுமே இந்தியாவில் மூன்று நாடுகளின் தேசியக் கொடிகளால் உடல் போர்த்தப் பட்டவர்.  இந்தியா, ரஷ்யா மற்றும் இந்தோனேசியா. பிஜு 2 முறை ஒடிசாவின் முதல்வராகவும் இருந்திருக்கின்றார். பிஜு பட்நாயக் ஒரு விமானி. இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் சிக்கலில் இருந்தபோது, ​​டகோட்டா என்ற போர் விமானத்தில் பறந்து ஹிட்லரின் படைகளைக் குண்டுவீசித் தாக்கினார்,இது ஹிட்லரை பின்வாங்கச் செய்தது.   சோவியத் யூனியனால் அவருக்கு  அவருக்கு மிக உயர்ந்த விருது மற்றும் குடியுரிமை வழங்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதிபாகிஸ்தானியர்கள் காஷ்மீரைத் தாக்கியபோது, ​​டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு ஒரு நாளைக்கு பல முறை விமானத்தில் பறந்து வீரர்களை ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்றவர் பிஜு பட்நாயக். இந்தோனேசியா ஒரு காலத்தில் டச்சுக்காரர்களின் காலனியாக இருந்தது, அதாவது ஹாலந்து.…

Loading

Read More

ஈழக் கவிஞருடன் ஒரு சந்திப்பு.

ஈழக் கவிஞர் ஒருவரைச் சந்தித்து உரையாடும் வாய்புக் கிடைத்தது. பணி நிமித்தமாக இந்தியா வந்திருந்த அவர் நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்து எனது இல்லத்தில் சற்று நேரம் உணர்ச்சி பூர்வமான உரையாடலில் செலவிட்டது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாய் இருந்தது. மல்லியப்பு சந்தி எனும் கவிதைத் தொகுப்பின் மூலமாக தமிழ் இலக்கியத்தோடும், தமிழ் ஈழ வரலாற்றோடும் தனக்குள்ள நெருக்கத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார் கவிஞர் நண்பர் திலகர் ( மயில்வாகனம் திலகராஜா ). மல்லியப்பு சந்தி என்பதை சட்டென்ற வாசிப்பில் மல்லிகைப்பூ சந்தி என நினைத்த என்னிடம் மல்லியப்பு சந்தி என்பது ஈழப் போராட்டக் களத்தின் நுழைவாயில் என்றும், அது எப்படி ஈழப்போராட்டத்தோடு தொடர்புடையதாகியது என்றும் விளக்கினார் கவிஞர். குருதியின் ஈரமும், கண்ணீரின் ஈரமுமாய் விளக்கும் ஈழத்தின் சோகத்தையும், கோபத்தையும், ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் கவிஞரின் உரையாடல் பிரதிபலித்தது எனில் அது மிகையல்ல. தலித்…

Loading

Read More

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பான சிவில் சமூகத்தின் அறிக்கை 

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பான சிவில் சமூகத்தின் அறிக்கை  கடந்த ஜனவரி 27, 2022 அன்று இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) மீதான திருத்தச் சட்ட மூலத்தினை வர்த்தமானியில் வெளியிட்டது. பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) எந்தவொரு குறைபாடுகளையும் அகற்றும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் காணப்படாததையிட்டு இதன் கீழ்க் கையொப்பமிடும் நாம் எமது ஆழ்ந்த அதிருப்தியை வெளியிடுகின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டம் வரலாற்று ரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவதையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அது முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருவதுடன் தற்போது மாற்றுக்கருத்துக்களைக் கொண்டோரையும் இலக்கு வைக்க பயன்படுவதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.  பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யவும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் அதன் பிரயோகத்தை தடைசெய்வதற்கான…

Loading

Read More

இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட அரசாணையை அரசே மறுக்கின்றது : மயில்வாகனம் திலகராஜா

இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட அரசாணையை அரசே மறுக்கின்றது : மயில்வாகனம் திலகராஜா

Loading

Read More

Sri Lanka- Protest campaign -උද්ඝෝෂණය-எதிர்ப்புப் பிரச்சாரம்

Topic: Protest campaign IN SRI LANKA Inviting by the socialist party of Sri Lanka Place – In front of Aheliyagoda Pradeshiya Sabha Time – 10.00 am (Sri Lanka)   5.30 am (France)   4.30 am (London) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88511493105?pwd=elFSV0hyUkgzODRKMVFnaGgrb0lJUT09 Meeting ID: 885 1149 3105 Passcode: 639711 Protest campagin  Inviting by the socialist party of Sri Lanka Place – In front of Aheliyagoda Pradeshiya Sabha Time – 10.00 am (Sri Lanka)   5.30 am (France)   4.30 am (London)  Slogans –      1. Offer an economic/Food subsidy for Tea Estate workers…

Loading

Read More

அசாத் சாலியின் வழக்கு தீர்ப்பானது, சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் சிறந்ததொரு உதாரணமாகும் – சுதந்திர ஊடக இயக்கம்

தான் வெளியிட்ட கூற்று தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அசாத் சாலி, சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்தமையானது அரசியல் அதிகாரங்கள்(பலம்வாய்ந்தவர்கள்) சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் செயற்பாட்டின் ஒரு நிகழ்வாகும் எனச் சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ICCPR சட்டத்தைப் மேற்கோள்காட்டி  தடுப்புக்காவலில் இருந்த அசாத் சாலியின் மீது நீதிமன்றத்தில் முன் குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிணை வழங்கப்படாத காரணத்தினால் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியதாயிற்று. கடந்த காலங்களில் பல சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் சமூக செயற்பட்டாளர்களை அரசியல் அதிகாரங்களின் சட்ட சீர்கேடுகள் (சட்ட துஷ்பிரயோகம்) காரணமாகச் அநீதியான வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள்குறித்த சமூகத்தின் மத்தியில் காணப்படும் கருத்துக்கள் தொடர்பில் அரசு தனது…

Loading

Read More

அக்கரைப்பற்று புத்தகக் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது …

 இன்று காலை கோலாகலமாக ஆரம்பமாகும் ‘அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி’ யோடு இணைந்ததாக ‘வழித்தடம்’ சஞ்சிகையும் வெளியாகிறது. அதன் ஆசிரியர்குழுவில் ஒருவனாக தோழர் சிராஜ் மஷ்ஹூரை பிரதம ஆசிரியராகக் கொண்டு தோழர்கள் கருணாகரன் , அம்ரிதா ஏயெம் ஆகியோருடன் இந்த முயற்சியில் இணைந்து இருப்பதில் பெருமகிழ்ச்சி.  இலங்கைத் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள் – நூல்வரிசை என ஐந்து சிறுகதை எழுத்தாளர்களின் தலா இரண்டு கதைகள் வீதம், நண்பர்கள் நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு நூலைத் தொகுத்து Pages புத்தக இல்ல வெளியீடாக கொண்டு வருகிறோம். நூல்வரிசை 1 – பித்தன் ஷாநூல்வரிசை 2 – அ.செ. முருகானந்தம்நூல்வரிசை 3 – வ.அ. இராசரத்தினம்நூல்வரிசை 4 – தெளிவத்தை ஜோசப்நூல்வரிசை 5 –  எஸ்.எல்.எம். ஹனீபா என அமையும் ஐந்து நூல்களும் ‘பாதி குழந்தை இருளும் ஒளியும்’‘காளிமுத்துவின் பிரஜாவுரிமை பழையதும் புதியதும்’‘…

Loading

Read More