சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளின் சங்கத்தினரால் மன்னார் மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டமானது மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் சங்கத்தின் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா அவர்களின் தலைமையிலே இடம்பெற்றது. இதில் அம்பாரை, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவிகள் நிருவாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் உறவுகள் கூட்டாக இணைந்து இந்த போராட்டத்தினை மிகவும் நேர்த்தியாக முன்னெடுத்திருந்தனர். மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக தபாலகம் வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது. போராட்டதில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து…
![]()