By koththigoda ஜனவரி 8 முதல் 2019 நவம்பர் 16 வரை “நல்லாட்சி அரசாங்கத்தால்” அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களை விசாரணை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். பொலிஸார், முப்படை உள்ளிட்ட அரச ஊழியர்களுக்காகவே இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன இருந்தார். 2015 மற்றும் 2019ற்கு இடைப்பட்ட காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமையால் பிரஜாவுரிமையை இல்லாது செய்ய வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைத்தது. ஆனால் கோட்டா ரணிலைப் பிரதமராகப் பரிந்துரைத்தார். ரணில் இறுதியாக கோட்டாவின் 69 இலட்சத்தின் ஜனாதிபதியானார். “உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு” (TRC) என்ற ஆணைக்குழுவை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மறுநாள் தெரிவித்தார். “இலங்கையில் நல்லிணக்கத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வது ஜனாதிபதியின் நோக்கமல்ல” என்பதாலேயே இவ்வாறான ஆணைக்குழு…