மே தின அறிக்கை 2025 : உலகத் தொழிலாளர் உரிமைகள்!

மே தினம் என்பது கடந்த கால வெற்றிகளை கொண்டாடுவது மட்டுமல்ல, உலகளாவிய பணியிடங்களில் சுரண்டல், சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான தொடர் போராட்டத்திற்கான ஓர் அழைப்பாகும்.  

2025 ஆம் ஆண்டில், தன்னியக்கமயமாக்கல்,  நிரந்தர வருமானமற்ற பொருளாதாரத் தொழில்கள், அதிகரிப்பற்ற சம்பளம் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை தடைசெய்வது போன்ற பிரச்சினைகளால் தொழிலாளர்கள் தொடர்ந்தும்  பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.   பல நாடுகளில் அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டான பேரம்,பணியிடப் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்புக் குறித்தான அக்கறையின்மையால் தொழிலாளர் உரிமைகள் பாதிப்புக்குள்ளாகின்றன. அதேவேளை, மில்லியன் கணக்கானோர் இன்னும் அடிப்படை உரிமைகள் அல்லது பாதுகாப்பு இல்லாமல் முறைசாரா துறைகளில் பணிபுரிகின்றனர்.  

ஆயினும், ஒற்றுமை உணர்வு தொடர்கிறது.  வாழ்க்கை ஊதியத்திற்கான வேலைநிறுத்தங்கள் முதற் கொண்டு தொழிலாளர் உரிமைகள் மற்றும் நிலைபேறான எதிர்காலம் இரண்டுக்கும் இடையேயான தொடர்பை அங்கீகரிக்கும்  பருவநிலை நீதிக்கான இயக்கங்கள் வரை, தொழிலாளர் இயக்கம் இன்னும் மாற்றத்திற்கான ஒரு பலம் வாய்ந்த சக்தியாகவே உள்ளது. நாங்கள்,  பெரும்பாலும் மதிப்பீடு இல்லாமலேயே சமூகத்தை இயங்க வைத்துக் கொண்டிருக்கும்  குடிபெயர்வோர், வீட்டுப் பணியாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள்  ஆகிய அனைத்துத் தொழிலாளர்களுடனும் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

**நியாயமான ஊதியம் மற்றும் வேலைக்கான உத்தரவாதம்** – நிறுவனங்கள் லாபம் ஈட்டும்போது தொழிலாளர்கள் வறுமையில் வாழக்கூடாது.  

**பாதுகாப்பான மற்றும் நியாயமான பணிச்சூழல்** – ஒவ்வொரு வேலையும் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.  

**தொழிற்சங்க உரிமைகள் மற்றும் கூட்டான பேரம்** – தொழிற்சங்கங்களை அடக்குவது என்பது ஜனநாயகத்தை அடக்குவதாகும்.  

**உலகளாவிய ஒற்றுமை** – தொழிலாளர் போராட்டங்கள் எல்லைகள் தாண்டி இணைக்கப்பட்டுள்ளன.  

பொருளாதார நீதிக்கான போர் இன்னும் முடிந்துவிடவில்லை. 

**ஒற்றுமையுடன்,** 

*01 மே, 2025*  

Loading

Leave a Reply